இலங்கை – சீரற்ற காலநிலையால் மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி ராஜ்குமார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)