இலங்கை

இலங்கையை உலுக்கிய ரத்துபஸ்வல விவகாரம்: இராணுவ வீரர்கள் விடுதலை

2013 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்ட ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று 11 வருடங்களின் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளான நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட் பார், ஒரு இராணுவ அதிகாரி மற்றும் மூன்று இராணுவத்தினரை வழக்கில் இருந்து விடுவித்தது.

பிரதிவாதிகள் அனைவரும் குறித்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமாக அங்கு ஒன்று கூடியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமையை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி கம்பஹா இரத்துபஸ்வல வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர்.

See also  இலங்கையில் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரணில் - சஜித்! நீடிக்கும் இழுபறி

இந்நிலையில், இது தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content