இலங்கை புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! 25 ரயில் சேவைகள் ரத்து

புகையிரத மின் பெட்டிகள் இல்லாமை காரணமாக கொழும்பில் இருந்து இயக்கப்படும் 25 ரயில் சேவைகளை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பிரதான பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதையில் இயங்கும் இரண்டு புகையிரத சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து (இரவு 7.15 மணி) பாதுக்கை வரை இயக்கப்படும் ரயில்கள்,
கொழும்பு முன்றில் இருந்து (காலை 7.02 மணி) ராகம வரை, ராகமவில் இருந்து (காலை 7.30 மணி) கொழும்பு கோட்டை வரையும், பாதுக்காவில் இருந்து (காலை 5.20 மணி) கொழும்பு கோட்டை வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)