இந்தியா செய்தி

இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக அதிகரிப்பு

நடப்பு ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கடன்களில் 148.8 லட்சம் கோடி ரூபாய் உள்நாட்டுக் கடனாகவும், 7 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே நாட்டின் கடன் உயரத் தொடங்கியது என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017-18 இல் கடன்களானது 82.9 லட்சம் கோடி ரூபாவாக  இருந்ததாகவும்,  2018-19 இல் 92.5 லட்சம் கோடி ரூபாவாகவும், 2019-20 இல் 105.2 லட்சம் கோடியாகவும், 2020-21இல் 122.1 லட்சம் கோடியாகவும்  கடன் பட்டியல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021-22 இல் கடன் 138.9 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமுள்ள 45 லட்சம் கோடி ரூபாய்  ஒன்றிய வரவு செலவு திட்டத்தில்  27 லட்சம் கோடி கடன்களாகும்.  அதில் 9.4 லட்சம் கோடி ரூபாய் வட்டிக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி