ஆசியா செய்தி

ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 21 வயது இப்ராஹிம் தாஹர் முஹம்மது அல்-சாதி,17 வயது Issa Nafez Jallad மற்றும் 24 வயதான உதய் அய்மன் மரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஜெனினின் அல்-ராசி மற்றும் இபின் சினா மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் விஸ்ஸாம் பக்ர் தெரிவித்தார்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படையணி, ஜெனின் அகதிகள் முகாமுக்கு அருகில் அதன் போராளிகள் “வன்முறை மோதல்களில்” ஈடுபட்டதாக ஒரு அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

(Visited 25 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி