உலகம்

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மரண விவகாரத்தில் சர்ச்சை – ஆவணங்களில் ஏற்பட்ட குழப்பம்!

  • February 8, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ( Jeffrey Epstein) மரணத்தை அறிவிக்கும் ஒரு கூட்டாட்சி அறிக்கை புதிதாக வெளியிடப்பட்ட நீதித்துறை கோப்புகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குறித்த அறிக்கை அவர் நியூயார்க் சிறை அறையில் இறந்து கிடந்த தருணத்திற்கு முந்தைய திகதியை கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட ஆவணம் 2019 ஆகஸ்ட் 9 என்ற திகதியை குறிக்கிறது. ஆனால் சிறைச்சாலை பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ கணக்குகள், ஆகஸ்ட் 10, 2019 காலை வரை எப்ஸ்டீன் […]

ஐரோப்பா செய்தி

வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்து

  • February 8, 2026
  • 0 Comments

தங்கள் தாயகத்தில் உள்ள உறவினர்கள் அமைதியும் உரிமைகளும் வேண்டி போராடுவதால் உயிரிழந்து வருவதாக வடக்கு அயர்லாந்தில் வாழும் ஈரானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பெல்ஃபாஸ்டின் (Belfast) நகர மண்டபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்று, ஈரானை விடுவிக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை கோரினர். ஈரானில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் அடக்கியதன் பின்னணியில் இந்த போராட்டம் இடம்பெற்றது. வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும் […]

ஐரோப்பா

உலகில் எந்த பயங்கரவாதியும் துணிந்து செய்யாததை புட்டின் செய்துள்ளார்!

  • February 8, 2026
  • 0 Comments

உக்ரைனின் அணுசக்தி அமைப்பின் மீதான விளாடிமிர் புதினின் தாக்குதல்கள் “உலகில் எந்த பயங்கரவாதியும் இதுவரை துணிந்து செய்யாத தாக்குதல் நிலை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஆழ்ந்த குளிர் காலத்தில்  வெப்பமூட்டும் மற்றும் மின்சார வசதிகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். புடின் வேண்டுமென்றே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்தமையால் நாட்டில்  அவசரகால மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வரும் நாட்களில் வெப்பநிலையானது -25 பாகை […]

உலகம் செய்தி

காசாவில் அடையாளங்களின்றி சடலங்களை குவித்த இஸ்ரேல்

  • February 8, 2026
  • 0 Comments

இஸ்ரேல் காசாவிற்கு பல பலஸ்தீனியர்களின் சடலங்களை அனுப்பியுள்ளதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சடலங்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதற்கான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 54 உடல்கள் கொண்ட 120 பைகள் மற்றும் 66 தனித்தனி மண்டை ஓடு மாதிரிகளையும் ஒப்படைத்தாக தடயவியல் அதிகாரி உமர் சுலைமான் தெரிவித்துள்ளார். கடந்த பரிமாற்றங்களில், பல உடல்கள் சிதைந்து, காயம் அடைந்த நிலையில் காணப்பட்டதுடன், துஷ்பிரயோகம் மற்றும் மரணதண்டனைக்கான […]

ஐரோப்பா செய்தி

நவீன பிரித்தானியாவை காட்டாத பாடசாலை நூல்கள் – மாணவர்கள் கூறுவது என்ன?

  • February 8, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மீண்டும் வாசிப்பில் ஈடுபடுத்துவது கல்வித் துறையில் தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இதன் மையமாக, பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஆங்கில இலக்கியப் பாடத்திட்டம் உள்ளது. ‘லிட் இன் கலர்’ (Lit in Colour) என்ற இயக்கம், GCSE வாசிப்புப் பட்டியல்கள் நவீன பிரித்தானிய சமூகத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று கூறி, அவற்றை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. தற்போதைய பாடத்திட்டத்தில் பன்முகத்தன்மை குறைவாக இருப்பதாகவும், மாணவர்கள் வாழும் சமூகத்தின் பல்வேறு குரல்களை […]

ஐரோப்பா செய்தி

தூதுவர் பதவி நீக்கம் – மண்டேல்சன் சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என அழுத்தம்

  • February 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம், எப்ஸ்டீன் தொடர்பான அண்மைய வெளிப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, பணியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய ஆவணங்கள், அவர் அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்பதைக் காட்டியதால், வெஸ்ட்மின்ஸ்டரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் கெய்ர் […]

உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை – அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் இஸ்ரேல்!

  • February 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் வரும் புதன்கிழமை வொஷிங்டனில் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஓமானின் மஸ்கட்டில்  அணுசக்தி பேச்சுவார்த்தைகளை  நடத்தியிருந்தனர். இதன்போது அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தனது உரிமையாக கருதுகிறது. பேச்சுவார்த்தைகளில் இந்த விடயத்தில் சமரசம் செய்யாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாலிஸ்டிக் […]

இலங்கை

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் பூர்த்தி – சிவாஜிலிங்கம் நினைவுப்பகிர்வு

  • February 8, 2026
  • 0 Comments

1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள். 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கும் மற்றொரு புயல் – 11000 பேர் வெளியேற்றம்!

  • February 8, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கிய தொடர்ச்சியான காற்று மற்றும் மழையின் காரணமாக 11,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபீரிய தீபகற்பத்தை லியோனார்டோ (Leonardo) புயல் தாக்கியதை தொடர்ந்து மற்றொரு புயலான மார்டா இவ்வார இறுதியில் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நிலைமையானது,  கடுமையான மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவை  கொண்டுவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்பெயின் […]

ஐரோப்பா

அமெரிக்காவிற்கு எதிராக இத்தாலியில் போர்கொடி! 10000 போராட்டக்காரர்கள் களத்தில்!

  • February 8, 2026
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கத்திற்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஐஸ் முகவர்களின் இருப்புக்கு எதிராக 10000 பேர் ஒன்றுக்கூடி  இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆரம்பத்தில் அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் துரதிஷ்டவசமான நிலையை கொண்டுவந்துள்ளது. விளையாட்டுகளிலிருந்து வெளியேறு,  இனப்படுகொலை நாடுகள், பாசிச […]

error: Content is protected !!