உலகம் செய்தி

சோமாலியாவில் பசி கொடுமை -உலக உணவுத் திட்டத்தின் உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்படுமா?

  • February 20, 2026
  • 0 Comments

சோமாலியாவில் நிதி பற்றாக்குறையால் உலக உணவுத் திட்டம் (WFP) வழங்கும் அவசர உணவு உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மிக கடுமையான பசி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.  மனிதாபிமான நிதியில் கடுமையான குறைவு உள்ளது என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, சுமார் 4.4 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் […]

உலகம்

ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

  • February 20, 2026
  • 0 Comments

உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்துள்ள வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்தியிருந்தார். இந்நிலையில், 1977 அவசரகால அதிகாரச் சட்டம் வரிகளுக்கான அதிகாரத்தை வழங்கவில்லை என்று வழக்குறைஞர்கள் வாதிட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை செல்லுபடியற்றதாக்கியுள்ளது. இருப்பினும் அதிக வரம்புகளுடன், மாற்று சட்ட கட்டமைப்பின் கீழ் இறக்குமதி வரிகளை விதிக்கும் […]

உலகம்

வேலைவாய்ப்பு மோசடி – 1000 கென்யர்களை ஏமாற்றிய ரஷ்யா!

  • February 20, 2026
  • 0 Comments

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பொய்க்கூறி சுமார் 1000 கென்யர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடுவதற்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரழந்துள்ளதாக கென்ய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையை கிமானி இச்சுங்வா (Kimani Ichung’wah) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ரஷ்ய தூதரக அதிகாரிகள் வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து இந்த மோசடியை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க விமான சக்தி பெருக்கம்: 120 க்கும் மேற்பட்ட விமானங்கள் பிராந்தியத்தில் நிலைநிறுத்தம்

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மத்திய கிழக்கில் பரந்த அளவிலான இராணுவ சொத்துக்களை குவிப்பதை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் குறித்து அதிகபட்சம் 10 முதல் 15 நாட்கள் என கூறினார். அரபிக் கடலில், USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானத்தாங்கி கப்பல் மற்றும் E-3 சென்ட்ரி AWACS விமானம் போன்ற முக்கிய படை பெருக்கிகள் செயற்பாடுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், எந்தவொரு […]

இந்தியா செய்தி

திமுக அணியில் தேமுதிக கேட்கும் தொகுதிகளால் நெருக்கடி

  • February 20, 2026
  • 0 Comments

திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தேமுதிகவும் ஒரு தொகுதி மதுரையில் கேட்பதால், ஏற்கெனவே திட்டமிட்டு தொகுதிகளைக் கேட்டு காய் நகர்த்தி வந்த ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, கடந்த முறை மதுரை கிழக்கு, மத்திய, வடக்கு, சோழவந்தான் மற்றும் தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், தெற்கில் மதிமுகவின் பூமிநாதன் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுக தனிப்பெரும் கட்சியாக மாவட்டத்தில் 5 […]

இலங்கை செய்தி

” கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கட்டளைத் தளபதி”

  • February 20, 2026
  • 0 Comments

இலங்கைக்குபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) இன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்றிருந்தார். கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு வருமாறு, ” அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு உறவானது பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது. அது எமது இரு நாடுகளதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. கடல்சார் […]

இலங்கை

சாலையோரம் காத்திருந்த பெண்மீது பேருந்து மோதி விபத்து!

  • February 20, 2026
  • 0 Comments

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் யட்டியந்தோட்டை, தங்கொலவத்த பகுதியில் இன்று (20) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் மற்றும் மகன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யட்டியந்தோட்டை […]

உலகம் செய்தி

ரமழான் தொழுகை – கடுமையான நுழைவு கட்டுப்பாடுகள் : 10,000 பலஸ்தீனியர்களுக்கு நுழைவு தடை

  • February 20, 2026
  • 0 Comments

ரமழானின் முதல் வெள்ளிக்கிழமை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குப் பலஸ்தீனியர்கள் நுழைவதை இஸ்ரேல் கடுமையாகத் தடைசெய்துள்ளது. ரமல்லாவிற்கு அருகிலுள்ள கலந்தியா சோதனைச் சாவடி முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று, உள்ளே செல்ல காத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் மேற்குக் கரையிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வளாகத்தில் செல்லமுடியும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள்,  தெரிவித்தனர். அனுமதிக்கபட்டவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 […]

செய்தி

பாரியளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி -போலி முகமைகள் முற்றுகை

  • February 20, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிதி மோசடி முறைப்பாடுகளைத் தொடர்ந்து, “விசா ஆலோசனை சேவைகள்” என்ற பெயரில் இயங்கும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை போலியாக வழங்கி பணம் வசூலித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிறுவனங்களை இலக்குவைத்து சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஜா-எல மற்றும் கடான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ருமேனியாவில் லொறி ஓட்டுநர் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி […]

உலகம்

இராணுவ சட்டம் அமுற்படுத்தப்பட்ட விடயம் – மன்னிப்பு கோரினார் யூன் சுக் இயோல்!

  • February 20, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) குறுகிய கால இராணுவச் சட்ட அறிவிப்பிற்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார். சியோல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனது இராணுவச் சட்ட ஆணையால் ஏற்பட்ட கஷ்டம் மற்றும் விரக்திக்கு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறிய […]

error: Content is protected !!