இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) ஆகியோர், கொழும்பில் அமைந்துள்ள ஆடை களஞ்சியம் மற்றும் தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் பார்வையிட்டனர். பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பு மற்றும் தரநிலைகள் தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 2026 ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்துக்கமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. மேலும் […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை Terrorism Prevention Act முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]
இந்தோனேசியாவின் கலிமந்தன் (Kalimantan ) பகுதியில் 07.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 633 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.4% வரை குறைந்துள்ளது. அத்துடன் 2025 ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது. […]
நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போகாராவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்ற பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், நாட்டின் பாதுகாப்புப் படையினர் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இந்திய […]
நேபாளத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மாதேஷ் மாகாணத்தின் கவுர் நகராட்சிக்கு உட்பட்ட சவ்கதா பகுதியில், சமீபத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் , இரண்டு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இது, மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கல்வீச்சு, வீதியோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன், தீக்கிரையாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, பொலிஸார் […]
தங்கத்தின் விலை இன்றைய தினம் (23) 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்க பவுண் ஒன்று 370,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும் […]
வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற மேற்படி நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் மேற்படி நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. இந்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் […]