செய்தி தமிழ்நாடு

ஷட்டரை இறக்கியதுதான் விஜய் செய்த தவறு : நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசியல் புரிதல் இல்லாத, வெறும் திரைப்பட மோகத்தால் கூடிய கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியுள்ள பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவிக்கையில், ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்கலாம், […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் பிரதமரின் ஆடையில் QR குறியீடு – ஸ்கேன் செய்தவர்களுக்கு கிடைத்த தகவல்

  • September 28, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆடையில் இருந்த QR குறியீடு பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது இந்த QR குறியீட்டினை காண முடிந்துள்ளது. காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தனது நாட்டின் நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொள்ள, குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். அதற்கமைய, குறியீட்டை ஸ்கேன் செய்தால், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் கொடூரமான படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு […]

தமிழ்நாடு

முன்ஜாமீன் வாங்கலாமா? விஜய் வீட்டிற்கு விரைந்த வழக்கறிஞர்கள் குழு

  • September 28, 2025
  • 0 Comments

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya […]

தமிழ்நாடு

கரூரில் நடந்த கோரம் : முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • September 28, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவொன்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்த குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி […]

இந்தியா

இந்தியாவில் அதிர்ச்சி – 13 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை

  • September 28, 2025
  • 0 Comments

இந்தியாவில் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக 40 வயது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏழாம் வகுப்பு படித்து வந்த சோனம் என்ற 13 வயது சிறுமி, அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் உத்தரப் பிரதேசத்தின் அனுப்ஷஹர் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் புதர்களில் பாடசாலை சீருடை அணிந்திருந்த ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் விசாரணையில், சிறுமி வியாழக்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்ததாகவும், பாடசாலை முடிந்ததும் அவரது […]

செய்தி தமிழ்நாடு

கைது செய்யப்படுகின்றாரா விஜய்? தமிழகத்தில் பரபரப்பு

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், […]

தமிழ்நாடு

விஜய் உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • September 28, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இந்த துயரம் நடந்திருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார். நேற்று நடந்த இந்த சம்பவத்தில், 8 குழந்தைகள், 16 பெண்கள், 12 ஆண்கள் உட்பட 38 […]

செய்தி

நியூசிலாந்தில் தனது பிள்ளைகளை கொலை செய்து 4 வருடங்களாக கிடங்கில் வைத்திருந்த தாய்

  • September 28, 2025
  • 0 Comments

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் தனது இரண்டு பிள்ளைகளை கொன்று, பின்னர் ஒரு சேமிப்பு அறையில் விட்டுச் சென்ற ஒரு தாய், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் தனது 8 வயது மகளையும் 6 வயது மகனையும் உணவில் விஷம் வைத்து கொன்றார். பின்னர் குழந்தைகளின் உடல்கள் மூன்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு, ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தப் பெண் தனது பெயரை […]

செய்தி

விஜயின் பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 பேரின் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேரும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நால்வரின் உடலங்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கரூர் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் […]

விளையாட்டு

இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

  • September 28, 2025
  • 0 Comments

முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிந்து, சூப்பா் 4 சுற்று ஆட்டங்களும் முடிந்த நிலையில், முதலிரண்டு அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன. முதன்முறையாக இறுதியில் மோதல்: ஆசியக் […]

error: Content is protected !!