வட அமெரிக்கா

கொலம்பியா மீது வரிகள் மற்றும் தடைகள் – டிரம்ப் அதிரடி உத்தரவு

  • January 27, 2025
  • 0 Comments

கொலம்பியா மீது வரிகள் மற்றும் தடைகளை விதிக்க தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை கொலம்பியா தங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கவில்லை. அதன்படி, இந்த தடைகளில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து கொலம்பிய பொருட்களுக்கும் 25 சதவீத அவசரகால வரி விதிப்பு, கொலம்பிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகள் மீதான பயணத் தடை ஆகியவை அடங்கும். இருப்பினும், டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • January 27, 2025
  • 0 Comments

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடமென வளிமண்டலவியல் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் தெற்குப் பகுதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க கூகுளின் புதிய நடவடிக்கை

  • January 27, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க கூகுள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் புதிய வசதியாக ‘அடையாள சோதனை’ என்ற யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க இந்த வகையிலான பயோமெட்ரிக் கொண்டு வரப்பட்டுள்ளது. “தவறான நபர்களின் கைகளில் கிடைக்கப்பெற்ற ஸ்மார்ட் போன்கள் மூலம் அதன் உரிமையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட முடியும்” என கூகுளின் வலைப்பதிவு குறிப்பிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்கும் சாம்சங் […]

செய்தி விளையாட்டு

அரை இறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

  • January 27, 2025
  • 0 Comments

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லும் இலங்கையின் வாய்ப்பு இயற்கை அன்னையின் சீற்றத்தால் பறிபோனது. இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன. இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி சீரற்ற காலநிலையால் நாணய சுழற்சி நடத்தப்படாமலேயே முழமையாக […]

செய்தி

கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

  • January 27, 2025
  • 0 Comments

COVID-19 நோய்த்தொற்றுக்குக் காரணமான கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா, சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவின் புதிய மதிப்பீடு வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, ஆய்வுக்கூடத்திலிருந்து கசிவு ஏற்பட்டதற்கான சாத்தியம் அதிகம் என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CIA) குறிப்பிட்டுள்ளது. COVID-19 சம்பவங்கள் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றின. அங்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த போது நடுவானில் தடுமாறிய விமானம் – 38 பேர் காயம்

  • January 27, 2025
  • 0 Comments

நைஜீரியாவிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த United Airlines விமானம் நடுவானில் தடுமாறியதால் 38 பேர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்த போதிலும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமானம் மீண்டும் நைஜீரிய விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அதில் இருந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் கடுமையாகக் காயமுற்றதாக நைஜீரியாவின் மத்திய விமான நிலையங்கள் ஆணையம் X தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் 32 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக […]

ஆசியா

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

  • January 27, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வீடுகளில் தீ ஏற்படுவதைத் தடுக்க மின்சாரச் சாதனங்களைக் கவனமாகப் பயன்படுத்துமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டுள்ளது. பொங்கோலில் நேற்று காலை ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 60க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். படுக்கை அறையில் இருந்த மின் சாதனத்திலிருந்து தீ மூண்டதை ஆரம்பப் புலனாய்வு காட்டுவதாகத் தற்காப்புப் படை தெரிவித்தது. மின் இணைப்புகளில் அதிக அளவில் மின்-சாதனங்கள் பொருத்தப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. சாதனங்களைப் பயன்படுத்தாதபோது மின்சாரத்தைத் துண்டிப்பது முக்கியம் […]

செய்தி

சமூக ஊடகங்களில் வைரலாகும் மஹிந்த மகனின் புகைப்படம் – பொலிஸார் விளக்கம்

  • January 27, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். அது பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். அதை […]

இலங்கை செய்தி

இலங்கை: வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

  • January 26, 2025
  • 0 Comments

மொரகஹேன காவல் நிலைய அதிகாரிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, அதன் மகசின் மற்றும் ஐந்து தோட்டாக்களுடன், வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கஹதுடுவ காவல் பிரிவுக்குள்பட்ட மாகம்மன பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். ஹோமகம, மாகம்மனாவில் வசிக்கும் 43 வயதான சந்தேக நபர் தற்போது விசாரணையில் உள்ளார். சம்பவம் குறித்து கஹதுடுவ மற்றும் மொரகஹேன காவல் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி ஏதென்ஸில் மக்கள் போராட்டம்

  • January 26, 2025
  • 0 Comments

ஏதென்ஸில் உள்ள கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மிக மோசமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி திரண்டனர். கிரேக்கத்திலும் வெளிநாட்டிலும் உள்ள டஜன் கணக்கான பிற நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன, அவசர சேவைகளுக்கான அழைப்பில் ஒரு பெண்ணின் கடைசி வார்த்தைகளை எதிரொலிக்கும் “எனக்கு ஆக்ஸிஜன் இல்லை” என்ற முழக்கத்தின் கீழ் பங்கேற்பாளர்கள் பேரணி நடத்தினர். ஏதென்ஸில் பங்கேற்பாளர்கள் “நாங்கள் மறக்க மாட்டோம்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர், […]

error: Content is protected !!