இலங்கை: யாழில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை சந்தித்த ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சனிக்கிழமை (மே 25) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இது எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதாரத்தை […]













