பிரித்தானிய பொதுத் தேர்தல் – கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்
பிரித்தானிய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலை முன்னிட்டு கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதில் 14 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்த்தரப்பான தொழிலாளர் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 650 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது. அதை முன்னிட்டு 5 வாரப் பிரசாரம் அதிகாரபூர்வமாகப் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் […]













