ஆசியா

அதிகரித்து வரும் வெப்பநிலை : ஆசியா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 29, 2024
  • 0 Comments

அதிகரித்து வரும் வெப்பநிலை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தொடர்ச்சியான சுகாதார எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது. பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தோனேசியா போன்ற மற்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “உயர் நீதிமன்ற நீதிபதி கம்ருல் காதர் மற்றும் நீதிபதி கிசிர் ஹயாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, வெப்பச்சலனம் காரணமாக அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மதரசாக்களை மூட […]

இலங்கை

குடும்ப பிரச்சினை காரணமாக 9 மாத சிசுவை கிணற்றில் வீசி சென்ற தாய்

  • April 29, 2024
  • 0 Comments

மஹாபாகே , ராகம , ஹல்லந்துருவ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நீரில் மிதந்த நிலையில் 9 மாத பெண் சிசுவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது. ஹலந்துருவ ராகம பகுதியைச் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சிசு காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது , தாயே தன் சிசுவை தூக்கி சென்று கிணற்றில் வீசுவது அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு!

  • April 29, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் சால்ஃபோர்டில் (Salford)  உள்ள இயற்கை காப்பகத்தில் மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து  தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார், சந்தை நகரமான எக்லெஸில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலுள்ள சந்து ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பிளாக்லீச் நீர்த்தேக்கம் மற்றும் கோலியரி வூட் ஆகிய இரண்டு இடங்களில் இருந்தும்  மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த எச்சங்கள் 60 வயதுடைய நபருடையதாக […]

இலங்கை

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • April 29, 2024
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிலும் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளும் மெரிட் அடிப்படையிலான மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு மட்டுமே இடைநிலை தரங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

ஐரோப்பா

ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது : வடகொரியா கருத்து!

  • April 29, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியமை தொடர்பில் வடகொரியா கரிசனை வெளியிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தாக்குதலின்போது அமெரிக்காவின் நீண்ட தூர பால்ஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் படத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் கவலையை தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. வீரமிக்க ரஷ்ய இராணுவத்தையும் மக்களையும் எந்தவொரு சமீபத்திய ஆயுதம் அல்லது இராணுவ ஆதரவுடன் அமெரிக்கா ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் எளிய கடவுச் சொல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • April 29, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச் சொற்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட நபரின் பெயர் அல்லது “12345” போன்ற பொதுவான கடவுச் சொற்களை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பலவீனமான கடவுச் சொற்கள் ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகள் யூகிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடவுச்சொற்களை நிர்வகிக்கும் வலைத்தளமான NordPass வெளியிட்டுள்ள தகவலின் படி பெரும்பாலான பிரித்தானியர்கள் யூகிக்கக்கூடிய கடவுச் சொற்கள் அதாவது 12345 போன்ற கடவுச் சொற்களையே […]

பொழுதுபோக்கு

நிறைமாத கர்ப்பிணி… அமலா பால் என்ன செய்றாங்கனு பாருங்க…

  • April 29, 2024
  • 0 Comments

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் டைட்டான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளுடன் செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். கடந்தாண்டு தனது நெருங்கிய நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் இருவீட்டார் குடும்பமும், நண்பர்கள் மட்டும் தான் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு வெறும் இரண்டே மாதங்களில் கர்ப்பமாக […]

விளையாட்டு

இங்கிலாந்தின் ரக்பி நட்சத்திரம் ஸ்பெயினில் அதிரடியாக கைது!

  • April 29, 2024
  • 0 Comments

இங்கிலாந்து ரக்பி நட்சத்திரம் பில்லி வுனிபோலா ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஜோர்காவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 31 வயதான அவர் காவல்துறையினரால் இரண்டு முறை தாக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று Palma நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சுழற்றும் சூறாவளிக்கு மத்தியில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த இளம் ஜோடி

  • April 29, 2024
  • 0 Comments

தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது. அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். […]

மத்திய கிழக்கு

அதிரடி வேட்டையில் களமிறங்கிய துருக்கிய அதிகாரிகள் ; IS அமைப்பினர் 38 பேர் கைது

  • April 29, 2024
  • 0 Comments

துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பொதுமக்கள், போலீசார் என பலரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பினரை கண்டறிந்து அவர்களை அழிக்கும் நோக்கில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி அலி எர்லிகயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.எஸ். அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போஜ்டாகன்-31 என்ற பெயரில் அடானா, ஆய்டின், கோரம், காசியன்டெப், கேசெரி மற்றும் மெர்சின் […]

error: Content is protected !!