ஆசியா

பூட்டானில் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது

  • March 22, 2024
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர். இந்நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ […]

இந்தியா

டெல்லி முதல்வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

இந்தியாவின் பிரபல எதிர்க்கட்சி அரசியல்வாதியும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் நிதிக் குற்ற முகவரகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மார்ச் 28ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது. குறித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இதுவரை ஒன்பது முறை அழைப்பாணைகளை அமலாக்கத் துறை அனுப்பியது. அது சட்டவிரோதம் என்று […]

செய்தி வட அமெரிக்கா

அமேசான் ஊழியர் போல் வேடமிட்டு கொள்ளையடித்த அமெரிக்கர்

  • March 22, 2024
  • 0 Comments

அமேசான் டெலிவரி தொழிலாளி போல் மாறுவேடமிட்டு, நியூயார்க் நகரில் பல மாதங்களாக நடந்து வரும் கொள்ளைச் சம்பவத்தின் போது, 12 வயது சிறுவனிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் உட்பட 35,000 டாலர்கள் (சுமார் 29 லட்சம்) நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். குயின்ஸில் உள்ள பல்வேறு சுற்றுப்புறங்களை குறிவைத்து, ஜனவரி 2023 முதல் மார்ச் 5 வரை குறைந்தது ஒன்பது அபார்ட்மெண்ட் உடைப்புகளுடன் திருடன் இணைக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு வீடியோவில் அவர் அமேசான் டெலிவரி […]

உலகம்

உலகளாவிய தண்ணீர் நெருக்கடி மேலும் மோதல்களை தூண்டுகிறது: ஐநா எச்சரிக்கை

உலகளாவிய நீர் பற்றாக்குறை அதிகரித்து வருவது மேலும் மோதல்களை தூண்டுகிறது மற்றும் உறுதியற்ற தன்மைக்கு பங்களிக்கிறது, ஐக்கிய நாடுகள் சபை ஒரு புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது. இது அமைதியை மேம்படுத்துவதற்கு சுத்தமான தண்ணீரை அணுகுவது மிகவும் முக்கியமானது என்று கூறுகிறது. UN World Water Development Report 2024, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகளவில் 2.2 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை மற்றும் 3.5 பில்லியன் மக்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதார வசதியின்றி உள்ளனர் என […]

விளையாட்டு

IPL Match 01 – சென்னை அணிக்கு 174 ஓட்டங்கள் இலக்கு

  • March 22, 2024
  • 0 Comments

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்சிஸ் மற்றும் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இதில் […]

ஆசியா

பாலஸ்தீனத்திற்கான நிதியுதவியை மீண்டும் தொடங்கும் பின்லாந்து

ஃபின்லாந்து பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரணம் மற்றும் வேலை முகமைக்கு நிதியுதவியை மீண்டும் தொடங்கும் என்று அதன் வெளிநாட்டு வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள ஏஜென்சியின் சில ஊழியர்கள் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் பங்கு பெற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அன்ர்வாவிற்கு தங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் அன்ர்வாவுக்கு நிதியுதவியை […]

வட அமெரிக்கா

ஆப்பிள் நிறுவனத்திற்று எதிராக வழக்கு தொடர்ந்துள்ள அமெரிக்க அரசாங்கம்

  • March 22, 2024
  • 0 Comments

ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபோனில் இருந்து ஆண்டிராய்டு போன்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஏற்படும் சிரமங்கள், மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை ஐபோன்களுடன் இணைத்து பயன்படுத்துபோது ஏற்படும் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அதிக விலை கொடுத்து ஐபோன்களை வாங்க வேண்டியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனால், பங்குகள் சரிந்து, ஆப்பிளின் சந்தை […]

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இணக்கப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். மதிப்பாய்வு, IMF இன் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை […]

இலங்கை

வவுனியாவில் 14 வயது பாலியல் துஷ்பிரயோகம் – தந்தையை கைது செய்த பொலிஸார்!

  • March 22, 2024
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி நேற்று (21) பாடசாலைக்கு சென்று தனது சக மாணவி ஊடாக தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு […]

ஆசியா

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 6.0 ரிட்கர் அளவிலான சந்திவாய்ந்த நிலநடுக்கம்

  • March 22, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!