விளையாட்டு

IPL Match 11 – 199 ஓட்டங்கள் குவித்த லக்னோ அணி

  • March 30, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டி கார் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் […]

பொழுதுபோக்கு

எதிர்பார்த்து காத்திருந்த தருணம்… மிரட்டும் அரண்மனை 4 ட்ரைலர்…

  • March 30, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் சுந்தர் சி. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க வைத்து அந்த படத்திற்காக மாநில விருதை வென்ற ஒரு இயக்குனர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. கமர்சியல் மன்னனாக தமிழ் சினிமாவில் விளங்கி வரும் சுந்தர் சி தற்பொழுது, ஏற்கனவே தான் இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்களின் தொடர்ச்சியாக அப்படத்தின் […]

இலங்கை

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

சமீபத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்து, பெண்ணை கடுமையாக காயப்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏனைய சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன, சந்தேக நபரின் அடையாளம் அல்லது இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0776976433, 0777921582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

ஆசியா

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

அலெப்போ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில், 38 சிரிய அரசாங்கப் படை உறுப்பினர்கள், ஈரானிய சார்பு லெபனான் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் ஏழு போராளிகள் மற்றும் ஏழு ஈரானின் நட்பு போராளிகள் அடங்குகின்றனர். அவர்கள் வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள “லெபனானின் ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான ராக்கெட் டிப்போவை” குறிவைத்ததாக […]

இலங்கை

மஹியங்கனை பிரதேசத்தில் விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

  • March 30, 2024
  • 0 Comments

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை அனைவராலும் பேசப்படுகின்றது. காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனை அமுல்படுத்தப்பட்டது. மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக போக்குவரத்தையும் பொதுமக்களையும் […]

தமிழ்நாடு

சென்னையில் சோகம்… தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி‌ விழுந்து ஒரு வயது குழந்தை பலி!

  • March 30, 2024
  • 0 Comments

சென்னையில் தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரிசூலம் லக்ஷ்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு(24). இவருக்கு திருமணமாகி காயத்ரி (20) என்ற மனைவியும், ஒரு வயதில் பிரணவ்ராஜ் என்ற மகனும் இருந்தனர். பெருங்குடியில் உள்ள குப்பைக்கிடங்கில் லாரி ஓட்டுநராக ராஜகுருவும், அவரது மனைவி, காயத்ரி குரோம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வருகின்றனர்‌. இந்நிலையில் ராஜகுருக்கு நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் தனது குழந்தையுடன் இருந்துள்ளார். […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் பரபரப்பு: நைட் கிளப்புக்கு சென்ற ஏராளமானோர் சிறைபிடித்த மர்ம நபர்கள்!

  • March 30, 2024
  • 0 Comments

நெதர்லாந்தில் நைட் கிளப்புக்கு சென்ற ஏராளமானோரை மர்ம நபர்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்தின் மத்திய நகரமான ஈடேவில் பெட்டிகோட் பார் என்ற நைட் கிளப்பில் ஒரு நபர் ஏராளமானோரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்றுள்ள பொலிஸார், சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தின் அருகில் சுமார் 150 வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி அப்பகுதியிலிருந்து பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் பிடித்து வைக்கப்பட்டவர்களில் 3 பேர் மட்டும் […]

ஆசியா

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டாக்சி – ஐவர் பலி, ஒருவர் மாயம்!

  • March 30, 2024
  • 0 Comments

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் […]

இலங்கை

விசா நிபந்தனைகளை மீறி நுவரெலியாவில் வேலை செய்த இரு இந்தியர்கள் கைது!

  • March 30, 2024
  • 0 Comments

வேலை விசா நிபந்தனைகளை மீறி நுவரெலியாவில் உள்ள உணவகங்களில் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று இந்திய பிரஜைகள் நேற்று (29.03) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியாவில் உள்ள இரண்டு உணவகங்களில் இருந்து  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய பிரஜைகளுக்கு நுவரெலியாவில் உள்ள குறிப்பிட்ட உணவகம் ஒன்றில் பணிபுரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேறு இடத்தில் பணிபுரிவதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் […]

இந்தியா

தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் : கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை […]

error: Content is protected !!