ஆசியா

பிரதமர் நெதன்யாகு மேஜைக்கு அடியில் ‘டைம் பாம்’; ஈரான் ராணுவம் வெளியிட்ட வீடியோ!

  • December 27, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மேஜைக்கு அடியில் டைம் பாம் வைத்து, அவரை படுகொலை செய்யும் அனிமேஷன் வீடியோ ஒன்றினை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது. சிரியாவில் செயல்படும் ஐஆர்ஜிசி என்னும் ஆயுதக் குழுவின் ஆலோசகராக சையத் ராஸி மௌசவி என்பவர் விளங்கி வந்தார். ஐஆர்ஜிசி கொட்டத்தை அடக்கும் நோக்கில், வான்வழித் தாக்குதல் ஒன்றின் மூலமாக அண்மையில் மௌசவி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்ற செய்தியுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிரான அனிமேஷன் வீடியோ ஒன்றை […]

ஐரோப்பா

செர்பியா தேர்தல் : உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் செர்பிய எதிர்க்கட்சி பிரமுகர்

செர்பியாவின் பிரதான எதிர்கட்சியின் முன்னணி நபர் ஒருவர், ஒன்பது நாட்கள் உணவு இல்லாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார். தொடர்ந்து மருத்துவ ஆலோசனையை மீறி, தேர்தல் மோசடிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நேற்று உறுதியளித்துள்ளார். செர்பிய தேர்தலில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஜனாதிபதி வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது. செர்பிய முற்போக்கு கட்சி 47 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி (வன்முறைக்கு எதிரான செர்பியா) 23.56 சதவீத வாக்குகளும், […]

ஆசியா

சீனாவில் ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழ வியாபாரிக்கு எழுதி வைத்த முதியவர்…!

  • December 27, 2023
  • 0 Comments

முதியவர் ஒருவர் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழ வியாபாரிக்கு எழுதி வைத்த நிலையில், அவரது உறவினர்கள் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமும் பழ வியாபாரிக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரில் வசித்து வந்த மா என்ற முதியவர் தனது வீட்டின் அருகே உள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மா வின் மகன் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர், […]

ஐரோப்பா

ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிப்பு!

  • December 27, 2023
  • 0 Comments

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, உலகின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். கோபுரத்தை கட்டிய பொறியாளர் குஸ்டாவ் ஈஃபிலின் 100வது ஆண்டு நினைவு நாளில் நடந்த வேலைநிறுத்தம், “தற்போதைய நிர்வாக முறைக்கு” எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரிஸின் மிகவும் பிரபலமான அடையாளமான ஈபிள் கோபுரம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது, அவர்களில் முக்கால்வாசி பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இலங்கை

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்படஅறுவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அறுவரும் இன்று (27) மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன், தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து உக்ரைன் கோரிய குண்டுகள்: வெளியான தகவல்

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலட்சம் குண்டுகளை உக்ரைன் கோரிய நிலையில் அது கிடைக்காததால் ஒரு மாதத்திற்கு வெறும் 110,000 குண்டுகளையாவது வழங்குமாறு கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் குண்டுகளை உறுதியளித்த நிலையில் ஐரோப்பிய படைகளின் கையிருப்பில் இருந்து நவம்பர் இறுதிக்குள் 300,000 குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உக்ரைன் கோரியதில் மூன்றில் ஒரு பங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

கொழும்பில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

  • December 27, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச் செல்லத் தயாரான நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரதுமரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் […]

பொழுதுபோக்கு

“சிம்பு அப்படிப்பட்டவர்… இன்னும் டச்ல இருக்கேன்” ஜோதிகா ஓபன் டாக்

  • December 27, 2023
  • 0 Comments

மன்மதன் படத்தில் விம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த ஜோதிகா, சிம்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் சிம்பு தன்னைவிட சின்ன பையனாக இருந்தாலும் ரொம்ப புடிக்கும் என்பதோடு இன்னும் சில முக்கியமான சம்பவங்களையும் ஷேர் செய்துள்ளார். கோலிவுட் இளம் ஹீரோக்களில் சிம்பு அளவிற்கு வேறு எந்த நடிகருக்கும் மாஸ் கிடையாது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது வேற லெவலில் சம்பவம் செய்து வருகிறார். மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து […]

ஐரோப்பா

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல – தையிப் எர்டோகன்!

  • December 27, 2023
  • 0 Comments

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நாஜிக்கள் யூத மக்களை நடத்துவதற்கு ஒப்பிட்டுப் பேசிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்று கூறினார். இஸ்ரேலுக்கான மேற்கத்திய ஆதரவு குறித்த தனது விமர்சனத்தை மீண்டும் கூறிய தையிப் எர்டோகன், இஸ்ரேலின் போருக்கு மத்தியில் காசாவில் மோதல்கள் குறித்த கருத்துக்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வரவேற்க துருக்கி தயாராக உள்ளது என்றார். போருக்குப் பிறகு காசாவின் […]

இந்தியா

இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் , மாஸ்கோவில் தனது இந்திய வெளியுறவு மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார், மேலும் ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!