ஆசியா

சியோலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தினால்… இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட சர்ச்சை வீடியோ!

  • December 28, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, பிணையக்கைதிகளை பிடித்து செல்வது போல் சித்தரித்து, இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதால், உடனடியாக அது நீக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் அமைப்பினர் காஸா பகுதியில் நடத்தி வரும் போர், சுமார் 2 மாதங்களை கடந்துள்ள […]

இலங்கை

அனுராதபுரதில் மனைவியை சித்திரவதை செய்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

  • December 28, 2023
  • 0 Comments

மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 38 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதேவேளை, சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளால் அவரது 13 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு […]

இலங்கை

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்!

  • December 28, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு எங்கிலும் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெள்ளத்திற்கு முதல் மடிச்சு கட்டி மற்றும் கபிலநிற தத்தி போன்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் , அவற்றிலிருந்து காப்பாற்றி வயல்நிலங்களை பராமரித்த போதும் வெள்ளத்தினால் தற்போது அவை அழிவடைந்திருப்பதாகவும், […]

இலங்கை

பொலிஸ் சார்ஜன்ட் தலையில் மீது கல் வீச்சு தாக்குதல்: சந்தேகநபர் கைது

தெமட்டகொட பகுதியில் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது, கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தெரிவித்துள்ளார். காயமடைந்த […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நியமனங்கள்!

  • December 28, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி நீல் இத்தாவலவை நியமித்துள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நியமனங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

ஐரோப்பா

அரச ஊடகங்களை அதிரடியாக கலைக்கும் போலந்து கலாசார அமைச்சர்

போலந்தின் கலாசார அமைச்சர் அதன் மாநில தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தி நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளார், இது அரசு நடத்தும் ஒளிபரப்பாளர்கள் மீதான அரசியல் பிளவை ஆழமாக்கியது. டொனால்ட் டஸ்க் தலைமையிலான ஐரோப்பிய யூனியன் சார்பு கூட்டணி இந்த மாதம் போலந்தில் ஆட்சியைப் பிடித்தது மற்றும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி (PiS) கட்சியின் எட்டு ஆண்டுகால ஆட்சியின் போது பிரச்சார மையங்களாக மாறியதாக விமர்சகர்கள் கூறும் மாநில ஊடக நிறுவனங்களை மாற்றியமைக்கத் தொடங்கியது என்பது […]

இலங்கை

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட பரபரப்பு

  • December 28, 2023
  • 0 Comments

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.இதன்போது ஒரு கட்டத்தில் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் தீடீரென கூட்டத்திற்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது. அமைச்சர் கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி […]

இலங்கை

பெறுமதிசேர் வரி குறித்து வரிகொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா விளக்கம்!

  • December 28, 2023
  • 0 Comments

எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28.12) விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தற்போதைய பெறுமதி சேர் வரி குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது இங்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர்  தனுஜா பெரேரா, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கான VAT வரியை நடைமுறைப்படுத்துவதில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும். அதன்படி, […]

ஐரோப்பா

2024ல் நடக்கும் போர் 2023ல் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் : உக்ரைன் அறிவிப்பு

2024ல் நடக்கும் போர் “2023ல் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்” என்று உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைவர் கூறியுள்ளார். “இல்லையெனில், [பொருளாதார நிபுணர்] கட்டுரையில் நான் எழுதியதை எதிர்கொள்வோம்” என்று ஜெனரல் வலேரி ஜலுஷ்னி கூறியுளளார். துரதிர்ஷ்டவசமாக, எதிரி நமக்குப் பின்னால் இல்லை என்று கூற வேண்டும். சமீபத்திய நாட்களில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சக்திவாய்ந்த மோதலை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும ஆனால் நாங்கள் முயற்சிகளை விட்டுவிடுவதில்லை. எதிரிக்கு நாம் ஏற்படுத்திய இழப்புகளின் அளவு யாரையும் தடுக்கும் என்று […]

பொழுதுபோக்கு

ஸ்ருதிக்கு கல்யாணமா? “கணவர்” பெயரை கூறிய பிரபலம்…

  • December 28, 2023
  • 0 Comments

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடனான தனது திருமண நிலை குறித்த ஊகங்களை நிராகரித்தார். பாலிவுட்டில் ‘ஓரி’ என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி சாந்தனுவை ஸ்ருதியின் ‘கணவன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்த ஸ்ருதி, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகக் கூறும் நான், இதை நான் ஏன் மறைக்க வேண்டும்? எனவே என்னை அறியாதவர்கள், தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்றுள்ளார். ரெடிட்டில் ஓரியின் ‘என்னிடம் […]

error: Content is protected !!