ஐரோப்பா

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட பரபரப்பு – மணப்பெணுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றின் போது விருந்தினர் ஒருவர் மணப்பெண்ணை கண்ணாடிப்போத்தல் ஒன்றினால் தாக்கியமையினால் திருமணம் தடைப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Noyon (Oise) நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்கு நிறைந்த மதுபோதையில் விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் திருமணத்தை நிறுத்தும் முகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். பின்னர் அவரை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து ஜொந்தாமினர் சென்றனர்.

ஆனால் நிலமை அதன் பின்னரே மோசமடைந்தது. குறித்த நபர் உடைந்த கண்ணாடிப்போத்தல் ஒன்றின் மூலம் மணப்பெண்ணை தாக்கியுள்ளார். கழுத்தில் வெட்டப்பட்ட குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இச்சம்பவத்தினால் திருமண நிகழ்வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபரை ஜொந்தாமினர் கைது செய்தனர்.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்