ஐரோப்பா செய்தி

உக்ரைனில் தீவிர தாக்குதலை தொடங்கிய ரஷ்யா – பதற்றத்தில் நாடு

உக்ரைனில் கடந்த 3 வாரங்களில் இல்லாத தாக்குதல் ஒன்றை ரஷ்யா தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் கவர்னர் ஒலெஹ் சினிஹிபோவ் தலைநகர் கியிவ் மற்றும் கருப்பு கடல் துறைமுக பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சுமார் 15 முறை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா அதன்  தாக்குதலை நடத்தியதாக கூறினார்.

மேலும், பெரிய கட்டிடங்கள் மற்றும் ஆற்றல் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்யா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் கியிவ் மற்றும் கார்க்கிவ் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆற்றல் மையங்கள் சேதம் அடைந்ததால் மின்சார தட்டுப்பாடு மட்டும் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களில் இது ரஷ்யாவின் முதல் பயங்கர தாக்குதல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!