செய்தி தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை வெங்கடேசன் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் வயது 25 என்பவர் சிறுமியை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரவீன்குமார் மற்றும் அவர் நண்பர் லக்மசுதன் என்பவரும் சேர்ந்து

இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக தெரியவந்தது.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் பிரவின்குமார் லக்மசுதன் ஆகிய மூன்று பேரும் கோயம்புத்தூர் பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றித்திரிந்ததாக கோயம்புத்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்

சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது, மேலும்

கோயம்புத்தூர் போலிசார் மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு

கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில் மதுராந்தகம் போலீசார் மூன்று பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த பிரவீன்குமார் மற்றும் லக்மசுதன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

செய்து சிறையில் அடைத்தனர்.

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!