தென்னாபிரிக்காவில் தனது காதலனுடன் சேர்ந்து குழந்தையை விற்ற பெண் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தென்னாப்பிரிக்காவில் தனது ஆறு வயது மகளை விற்பனை செய்தமைக்காக பெண்னொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெல்லி ஸ்மித் என்ற குறித்த பெண் அவரது காதலன் மற்றும் மற்றொரு ஆணுடன் சேர்ந்து, குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் மனித கடத்தல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்மித், காதலன் ஜாக்குன் அப்பொலிஸ் மற்றும் அவர்களது நண்பர் ஸ்டீவனோ வான் ரைன் ஆகியோருக்கு மனித கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கடத்தல் குற்றத்திற்காக தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
(Visited 3 times, 1 visits today)