இலங்கை

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா? : வெளியான அறிவிப்பு!

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்,  மீண்டும் டீசல் விலை அதிகரிக்கப்படுமாயின் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!