விளையாட்டு

விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்ட காரணத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இல்லாததை நிரப்ப ஒரு அனுபவமிக்க வீரர் இருந்தால் நன்றாக் இருக்கும். அந்த மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தோம்.

ஆனால் இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டோம். எனவே, விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content