ஈரானை சூழ்ந்த போர் மேகம் : இந்த வாரத்திலேயே தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கணிப்பு!
ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் ஈரான் அதற்கு இணங்க மறுக்கிறது. இதன்காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஒரு புரிதல் எட்டப்பட்டதாகக் கூறிய போதிலும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இந்த வாரம் ஜெனீவாவில் நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்தன.
இதற்கிடையே அமெரிக்கா மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், டேங்கர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. அந்த பகுதியில் ஈரான் ஏற்கனவே போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் சனிக்கிழமையன்று சாத்தியமான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று சிபிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வொஷிங்டனின் முக்கிய கோரிக்கைகளை ஈரான் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். அத்துடன் இராணுவ நடவடிக்கைகள் சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அதன் தெற்குப் பகுதியில் ரொக்கெட் ஏவுதல்களுக்குத் தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





