ஆசியா

இந்தோனேசியாவில் வெடிக்க ஆரம்பித்துள்ள எரிமலை – வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் மக்கள்

இந்தோனேசியாவில் Ibu எரிமலை வெடிக்கும் நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

தொலைதூர தீவான Halmahera தீவில் எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு 14 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை எச்சரிக்கை நிலையும் ஆக அபாயமிக்க நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எரிமலையின் 5 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யும்படி குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபாயமிக்க வட்டாரத்தில் உள்ள 6 கிராமங்களில் வசிக்கும் குறைந்தது 3,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இருப்பினும் 600க்கும் குறைவானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் தங்களுக்குப் பழகிவிட்டதாகவும் எரிமலை நடவடிக்கைகள் கூடிய விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.

 

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!