ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – குப்பை தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் ஒருவரின் சடலம் சக்கரங்கள் கொண்ட குப்பை தொட்டியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவரும் சிறு மகனும் இந்தியாவுக்குப் பறந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு தாயின் உடல் தொட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள குடும்பத்தினரை அழைத்து பெண்ணின் மரணத்தைப் பற்றி கூறியதாக கூறப்படுகிறது.

சைதன்யா ‘ஸ்வேதா’ மதகனி என்ற பெண்ணின் உடல் ஜீலாங்கிலிருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்லியில் உள்ள கழிவுத் தொட்டிக்குள் சனிக்கிழமை நண்பகலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதகனியின் கணவர் அசோக் ராஜ் வரிகுப்பலா, மகனுடன் அண்மையில் இந்தியாவுக்குத் திரும்பியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தித்தாளிடம் தெரிவித்தன.

இந்த நிலையில் விக்டோரியாவில் உள்ள பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொலிஸார் அழைப்பேற்படுத்தி தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த செயலை குற்ற செயல் என குறிப்பிடும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

(Visited 23 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content