90 % கடலுக்கடியில் இணையப் போக்குவரத்து- பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு சவால்
பிரித்தானியாவின் இணையத் தரவு பரிமாற்றமும் ஆற்றல் விநியோகமும் பெருமளவில் கடலடிக் கேபிள்கள் மற்றும் குழாய்கள் மீது சார்ந்துள்ளது.
நாட்டின் அன்றாட இணையப் போக்குவரத்தின் 90% க்கும் அதிகமானவை செயற்கைக்கோள் வழியாக அல்லாமல், இந்தக் கடலடிக் கேபிள்கள் மூலமாகவே நடைபெறுகின்றன.
ஆனால், இந்த அதிக சார்பு பாதுகாப்பு சவால்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட கடல் பகுதிகளில் இருந்து கரைக்கு வரும் கேபிள்கள் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றிணைவதால், அவை தாக்குதல்களுக்கு எளிதாகக் குறியாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உட்பட்ட ‘குகி’ (GUGI) பிரிவு, ஆழ்கடல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நீர்மூழ்கிக் கருவிகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கருவிகள் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவையாகவும், கடலடிக் கேபிள்களை சேதப்படுத்தக்கூடிய உபகரணங்களுடன் அமைக்கப்படக்கூடியவையாகவும் உள்ளன.
மேலும், இவ்வகை நீர்மூழ்கிக் கருவிகள் கடலடியில் நீண்டகாலம் மறைந்து கண்காணிப்பு சாதனங்களை நிறுவவும் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு நிறுவனம் Check Point Software Technologies இன் நிபுணர் Charlotte Wilson, இந்த நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல எனக் குறிப்பிடுகிறார்.
முக்கிய உட்கட்டமைப்புகள் எங்கு அமைந்துள்ளன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய திட்டமிட்ட முயற்சியாக இதைப் பார்க்க வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், கடலடிக் கேபிள்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.





