வியட்நாமில் இரு விமானங்கள் உரசி விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
வியட்நாமின் ஹனோய் நகரில் இரு விமானங்கள் உரசி விபத்தில் சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நொய் பாய் சர்வதேச விமானநிலையத்தில் போயிங் ட்ரீம்லைனர் விமானமும், ஏர்பஸ் விமானமும் தரையிறக்கப்பட்டன.
இந்நிலையில் ஏர்பஸ் விமானம் டியன் பியன் என்ற இடத்திற்கு புறப்படுபவதற்காக காத்திருந்த நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போயிங் விமானத்தின் இறக்கை உரசியதில் ஏர்பஸ் விமானத்தின் வால் பகுதி இரண்டாக உடைந்தது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து இரு விமானங்களும் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
(Visited 16 times, 1 visits today)





