உலகம்

ஜி20 மாநாட்டைப் புறக்கணித்தார் ட்ரம்ப் – தென்னாப்பிரிக்கா மீது குற்றச்சாட்டு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்ததுடன், ஜி20 தலைமைப் பதவியில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மியாமியில் நடைபெற்ற அமெரிக்க வணிக மன்றத்தில் (American Business Forum) பேசிய ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுழற்சி முறையில் தற்போது ஜி20 தலைமைப் பதவி வகிக்கும் தென்னாப்பிரிக்கா, அந்தக் குழுவின் உறுப்பினராகக் கூட இருக்கத் தகுதியற்றது என விமர்சித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், இது தொடர்பாக பலமுறை விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து தப்பி வரும் வெள்ளையர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!