ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்

சிங்கப்பூர் – மரைன் பரேடில் உள்ள நெப்டியூன் கோர்ட் காண்டோ குடியிருப்பின் 18வது மாடியில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29 அன்று மாலை 4:50 மணியளவில் நடந்துள்ளது. மாடியில் இருந்து விழுந்த நபர் கீழே உள்ள மரத்தில் விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 46 வயதுடைய அவர் உயிரிழந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

அன்று மாலை 4:55 மணியளவில் 2 மரைன் விஸ்டாவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறியது. பின்னர், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதி செய்து SCDF துணை மருத்துவர் அறிவித்தார்.

இதனை அடுத்து, அந்த நபரின் 55 வயது மனைவி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கணவன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி கதறி அழுததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.

இறந்தவர் வெளிநாட்டவர் என்றும் ஷின் மின் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content