முக்கிய செய்திகள்

இலங்கையில் இரசாயன விஷக் கலவை கலந்த டின்மீன்கள்! மீள் ஏற்றுமதி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை

ஒருகொடவத்தையில் உள்ள சுங்க களஞ்சிய வளாகத்தில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த ஆசனிக் (Arsenic) இரசாயன விஷம் கலந்த டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு 215,000 அமெரிக்க டொலர் பெறுமதியானது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்களை, சுற்றாடல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இன்று பார்வையிட்டார்.

இலங்கையில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இருப்பு அழிக்கப்பட மாட்டாது என தெரிவித்த பிரபாத் சந்திரகீர்த்தி, மேற்படி சரக்குகளை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 10 visits today)
See also  இலங்கை: நுவரெலியா தபால் நிலைய சொத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்

You cannot copy content of this page

Skip to content