நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!
அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது நியூயார்க்கில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல், கோகோயின் இறக்குமதி, துப்பாக்கிகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஆயுதங்கள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருந்ததாக நிக்கோலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவு பெற்றவுடன் அவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் அடிப்பணிந்த வெனிசுலா!





