உலகம்

பப்புவா நியூகினியாவில் நடந்த கொடூர சம்பவம் : இருபத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி!

பப்புவா நியூ கினியாவின் வடக்கில் உள்ள மூன்று தொலைதூர கிராமங்களில் வன்முறை கும்பல்களால் 26 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுமார் 30 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவால் கிராம மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள கிராமவாசிகள் ஒரு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், குற்றவாளிகளை பெயரிட மிகவும் பயந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரவில் எஞ்சியிருந்த சில உடல்கள் முதலைகளால் சதுப்பு நிலத்தில் கொண்டு செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!