அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கையடக்க தொலைபேசிகளில் இருக்கும் சிறிய துளைகளுக்கான காரணம்

இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன.

செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனின் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்?

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அதற்கான விடை தெரியாது.

அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோஃபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நாம் செல்போனில் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான். நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும்போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.

அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும், இந்த மைக்ரோபோன் அனைத்துவித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனின் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்புக்கு கேட்கும்.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி