இலங்கை செய்தி

Onmax தலைமறைவானவர்கள் தப்பி ஓடுவதற்கு முன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பு

பலகோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய அளவிலான பிரமிட் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட Onmax DT. தனியார் நிறுவனத்தின் சூத்திரதாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர் கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர வகுப்பு ஹோட்டல் ஒன்றில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (12) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த பிரமிட் திட்டத்தில் சிக்கிய இந்நாட்டு மக்களின் 15 பில்லியன் ரூபாய், Onamax D.T. தனியார் நிறுவனத்தின் தலைவரான மதுரங்க பிரசன்ன சமரகோன் எனப்படும் சாம் பஸ்நாயக்கவின் கணக்குகள் இதுவரை வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் ஊடாக ஜோர்ஜிய பிரஜை மற்றும் பிரமிட் நிறுவனத்தின் தலைவரான ககபர் அன்லனிஸ் பிலிஸ் என்ற சந்தேகநபர்களை கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், 592 மில்லியன் ரூபா பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பிரமிட் மோசடி செய்த  Onmax DT. மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தரிந்து கயானினால் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இணையத்தளத்திலுள்ள கணக்குகள் தொடர்பான 5560 முகவரிகள் ஆராயப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சந்தேகநபரான சாரங்க ஜயதிஸ்ஸவின் பெயரில் 479 கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கேற்ப கோடிக்கணக்கான ரூபாய்கள் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Onmax DT. இணையத்தளத்தில் உள்ள கணக்குகள் தொடர்பான முகவரிகள் 5 நிமிடங்களுக்குள் மாற்றத்திற்கு உட்பட்டது என்றும், தாங்களும் அதை விசாரித்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு முதல் இந்த பாரிய மோசடி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த நாட்டு மக்களிடம் இருந்து பலகோடி ரூபாவை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை மே 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content