லிபியாவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08) முதல் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் நிலைமை உருவாகியது.
எவ்வாறாயினும், இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)





