பொழுதுபோக்கு

தமன்னாவுக்கு வந்த சோதனை? நினைச்சு கூட பார்க்க முடியல…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது.அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனார்.

இந்த நிலையில் தமன்னா மும்பையில் ஒரு சில இடங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி தமன்னாவின் புதிய அலுவலக இடம் ஜுஹு தாரா சாலையில் வெஸ்டர்ன் விண்டில் அமைந்துள்ளது. இந்த இடம் 6065-சதுர அடியில் பரந்து விரிந்துள்ளது.

இதற்கு ரூ. 18 லட்சத்தை தமன்னா மாத வாடகை செலுத்த உள்ளார். அவர் 5 ஆண்டுகள் வாடைகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இதற்கு ரூ.75 லட்சத்தை அவர் செக்யூரிட்டி டெபாசிட்டை செலுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மும்பையின் அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் அமைந்துள்ள தனது 3 வீடுகளை தமன்னா அடமானம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2595 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீடுகள் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து தமன்னா இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தமன்னா தற்போது வேதா, ஸ்தீரி ஆகிய ஹிந்தி படங்களிலும், ஒடெலு என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content