இலங்கை செய்தி

புலம்பெய் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் Mahinda Rajapaksa மகனான நாமல் ராஜபக்ச Namal Rajapaksa , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார்.

மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச பிரிட்டன் செல்வதற்கு ஏற்பாடு நடைபெற்றுவந்தது.

எனினும், மேற்படி நிகழ்வில் நாமல் ராஜபக்ச பங்கேற்பதற்கு பிரிட்டனிலுள்ள புலம்பெயர் தமிழ் குழுக்கள் போர்க்கொடி தூக்கின.

நாமலின் உரையை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தின. இதனால் நாமலின் உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!