சிங்கமலை வனப்பகுதியில் சிக்கி தவித்த வெளிநாட்டுப் பெண் மீட்பு
ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரை ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு வெற்றிகரமாக மீட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் (Amsterdam) சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இந்தநிலையில் குறித்த பெண் கடந்த 05 ஆம் திகதி தனது சில நண்பர்களுடன் சிங்கமலை வனப்பகுதியில் ஒரு […]




