விளையாட்டு

IPL போட்டிக்காக பாகிஸ்தான் லீக்கிலிருந்து விலகினார் தசுன் ஷானக்க!

  • March 23, 2026
  • 0 Comments

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக்க Dasun Shanaka , 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக தற்போதைய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து தசுன் ஷானக்க விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலீடாக லாகூர் காலண்டர்ஸ் அணி டேனியல் சாம்ஸை இணைத்துள்ளது. டT20 உலகக்கிண்ண தொடரின்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க, […]

விளையாட்டு

வெற்றி மகுடம் சூடப்போகும் அணி எது? 25 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • March 23, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை மறுதினம் (25) நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது T20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா […]

இலங்கை செய்தி

காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்!

  • March 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று […]

உலகம் செய்தி

லண்டனில் ஆம்புலன்ஸ்கள் தீக்கிரை: மர்ம கும்பல் வெறியாட்டம்!

  • March 23, 2026
  • 0 Comments

லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் Golders Green பகுதியில் உள்ள யூத சமூக ஆம்புலன்ஸ் சேவைக்குச் சொந்தமான நான்கு வாகனங்கள் Ambulances மர்ம நபர்களால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த மூன்று நபர்கள் இந்த ஆம்புலன்ஸ்கள்மீது எரிபொருளை ஊற்றித் தீவைத்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனை யூத எதிர்ப்பு சம்பவமாக பொலிஸார் கருதி, விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். ஆம்புலன்ஸ்களில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் […]

இலங்கை செய்தி

இலங்கை வந்தார் ADB தலைவர்: ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு!

  • March 23, 2026
  • 0 Comments

மூன்று நாள் பயணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB தலைவர் மசாட்டோ கன்டா Masato Kanda இன்று (23) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ Dr.Anil Jayantha Fernando வரவேற்றார். இன்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தை ஆய்வு செய்ய உள்ள ADB தலைவர்,  தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு […]

உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை பலம்: நேட்டோ கழுகுப்பார்வை!

  • March 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ (Nato ) அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது. லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், இது தொடர்பில் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே Mark Rutte இதுவரை உறுதிப்படுத்தவில்லை, எனினும், ஈரான் அத்தகைய ஆற்றலை அடைவதற்கு மிக நெருக்கமான நிலையில் உள்ளதை அவர் […]

உலகம் செய்தி

Hezbollah அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா Hezbollah அமைப்பை குறிவைத்து லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இவ்வாறு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேல், தற்போது அவ்வமைப்பின் உட்கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைத் தடுக்க லிட்டானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களைத் தகர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர […]

உலகம் செய்தி

தேசிய பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய மக்கள் அச்சம்!

  • March 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவருகின்றது. இதற்கமைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு வெளிநாட்டு இராணுவத் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் அஞ்சுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தங்களது நாடு போதியத் தயார் நிலையில் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம்: அடுத்த கட்டத்துக்கு செல்கிறது போர்!

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியத்தின் எரிசக்தி வசதிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்றும், இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் […]

இலங்கை செய்தி

எரிபொருளை பதுக்குபவர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

  • March 22, 2026
  • 0 Comments

எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ எரிபொருள் மற்றும் மின்சாரத்தை நாம் அனைவரும் சிக்கனமாக – […]

error: Content is protected !!