உலகம் செய்தி

போர் வியூகத்தை மாற்றுகிறார் ட்ரம்ப்: மத்திய கிழக்கில் நடக்கப்போவது என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இதற்கமைய ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் ஈரானின் கர்க் தீவு எண்ணெய் மையத்தை கைப்பற்றல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கூடுதல் படையினரை களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆலோசித்துவருகின்றார் எனக் கூறப்படுகின்றது. ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை கைப்பற்றுவதற்குரிய திட்டமும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!

  • March 19, 2026
  • 0 Comments

அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய மகஜர், இன்று வியாழக்கிழமை கொழும்பு -07 இல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் (United Nations Compound) கையளிக்கப்பட்டுள்ளது. குரல் அற்றோரின் குரல் (Voice of the Voiceless) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணம் நல்லூர் […]

இலங்கை செய்தி

அநுரவை சந்தித்தார் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி: மத்திய கிழக்கு போர் குறித்தும் பேச்சு!

  • March 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

  • March 19, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு Ranil Wickremesinghe அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஐ.தே.க. முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம்,” எனவும் அவர் கூறினார். சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இலங்கை செய்தி

அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் இலங்கை விஜயம்!

  • March 19, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் Sergio Gor, இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உயர்மட்ட சந்திப்புகளுக்காக அவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருக்கும் காலப்பகுதிக்குள் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசாங்கத்தின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார். […]

இலங்கை செய்தி

‘பொலிஸாரின் விசாரணை வேட்டை’யை எதிர்த்து யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

  • March 19, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று (19) இப் போராட்டம் இடம்பெறுகின்றது. “ மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம். பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து , மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை […]

பொழுதுபோக்கு

மீண்டும் ‘பேய்’ படம்!

  • March 19, 2026
  • 0 Comments

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, Sundar C மீண்டும் பேய்க் கதையொன்றில் நடிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இப்படத்துக்கான படப்பிடிப்பு எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கின்றனர். ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் குறித்த ஒளிப்பதிவு செய்கிறார். திகில் […]

இலங்கை செய்தி

கத்தார் அமீருடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடியது என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி, கத்தார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் […]

ஆஸ்திரேலியா உலகம்

“முக்கிய நோக்கங்கள் நிறைவு: விரைவில் முடிவுக்கு வரும் போர்”

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டன என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார். எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது மாநில பகுதிகளுக்காக பெரிய அளவிலான எரிபொருளை விடுவிக்க உள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியா மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் தற்போத பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் […]

உலகம் செய்தி

ஈரான் பதிலடி: கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையம்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானின் எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார் நாட்டின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்தத் திட்டத்தில் அமெரிக்காவிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். கத்தார் நாட்டின் மீது எந்தத் தவறும் இல்லாதபோது ஈரான் அங்குத் தாக்குதல் நடத்தியது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில் ஈரான் கத்தாரைத் தாக்கினால், அமெரிக்கா ஈரானின் எரிவாயு […]

error: Content is protected !!