யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகொலை: மகள், காதலன் கைது! நடந்தது என்ன?
யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மகளின் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட விரிவுரையாளரின் சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில் இருந்து இன்று (21) மீட்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் அரங்கேற்றியுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் 19 வயது மகளும், 21 வயது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, அவரும் அவரது மகளும் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டனர் […]













