இலங்கைக்கு தோள்கொடுக்க ஈரான் எப்போதும் தயார்!
இலங்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஈரான் தயாராகவே இருக்கின்றது என்று அந்நாட்டு தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பிராந்திய நிகழ்வுகளால் தேவையான எண்ணெயைப் பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டால், ஈரான் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும். ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை, மேலும் நாங்கள் இலங்கைக்கு தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம். […]













