விளையாட்டு

வெற்றி மகுடத்தை நிர்ணயிக்கும் பரபரப்பான ஆட்டம் நாளை!

  • March 14, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் Pakistan மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகளுக்கிடையிலான 3 ஆவதும், கடைசியுமான ஒருநாள் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பகல் 1.45 மணியளவில் Mirpur, மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வென்றுள்ளதால் தொடரை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டம் இதுவென்பதால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

உலகம் செய்தி

ஈரானில் இடைக்கால அரசை வழிநடத்த களமிறங்கும் முக்கிய புள்ளி?

  • March 14, 2026
  • 0 Comments

இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி Reza Pahlavi , பாரிஸில் Paris உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை Volodymyr Zelensky சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தான் தகுதியானவர் என்று பஹ்லவி , உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது. அத்துடன், ரஷ்யாவுடன் ஈரான் கொண்டுள்ள இராணுவக் கூட்டணி மற்றும் உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பில் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் போர்க்கொடி!

  • March 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தும் அமெரிக்காவின் முடிவை ஐரோப்பிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர இந்தச் சலுகை ரஷ்யாவிற்கு பெரும் நிதி உதவியாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தீர்மானம் ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, உக்ரைனில் அமைதி ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இத்தகைய தளர்வுகளை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் மரணப் பொறி: லெபனானில் உக்கிர தாக்குதல்!

  • March 13, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் தலைநகரம் Beirut மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போர் நடவடிக்கையால் லெபனானில் சுமார் எட்டு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் […]

இலங்கை செய்தி

‘தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு’: வழக்கு ஒத்திவைப்பு!

  • March 13, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழ்க்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து […]

உலகம் செய்தி

ஈரான் தலைவர்களை அழிப்பது மிகப்பெரிய கௌரவம்: ட்ரம்ப்!

  • March 13, 2026
  • 0 Comments

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump சூளுரைத்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்திவருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல்மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தலங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டு வர இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்நிலையில், […]

இந்தியா

இந்தியாவில் பூமிக்கடியில் இரகசிய எரிபொருள் குகைகள்: பின்னணி என்ன?

  • March 13, 2026
  • 0 Comments

போர்ச்சூழலால் உலகளவில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பூமிக்கடியில் 3 இரசிகய குகைகளில் இந்தியா கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு கச்சா எண்ணெயை இவ்வாறு சேமித்து வைத்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல […]

பொழுதுபோக்கு

விஜய்க்காக ஆதரவு குரல் எழுப்பும் பிரியங்கா சோப்ரா!

  • March 13, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் Vijay மற்றும் நடிகை திரிஷா Trisha தொடர்பில் பல கோணங்களில் கதை அடிபடும் நிலையில், விஜய்யை புகழ்ந்து மற்றுமொரு நடிகை கருத்து வெளியிட்டுள்ளார். தனது முதல் படத்தின் நாயகன் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே நடிகை பிரியங்கா சோப்ரா, Priyanka Chopra விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’: ஜனாதிபதி தலைமையில் கூடியது பொருளாதார கண்காணிப்புக் குழு!

  • March 13, 2026
  • 0 Comments

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் , நேற்று (12) பிற்பகல் கூடியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய […]

இந்தியா தமிழ்நாடு

கட்சி தாவும் படலம் தொடர்கிறது: அ.தி.மு.கவில் இணைந்தார் காளியம்மாள்!

  • March 13, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கட்சி தாவும் படலமும் தொடர்கின்றது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் Kaliammal, எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami முன்னிலையில் இன்று (13) அதிமுகவில் AIADMK இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் […]

error: Content is protected !!