யாழில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!
யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நகரின் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வளையல்கள் திருடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், கலட்டி அம்மன் கோயில் பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் புகுந்து 3.5 பவுண் தங்க மோதிரம் மற்றும் […]













