தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!
இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 11 பொதிகளில் […]




