உலகம் செய்தி

துருக்கியால் இயக்கப்படும் எரிபொருள் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல்!

  • March 26, 2026
  • 0 Comments

கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த துருக்கியால் இயக்கப்படும் கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Sierra Leonne நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 27 துருக்கி மாலுமிகள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்திலிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயுடன் புறப்பட்ட இந்த கப்பல் Turkish firm Besiktas நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய நிலையில், […]

அரசியல் இலங்கை செய்தி

“சுரேஷ் சாலே வைத்தியசாலையில்”-புலி புராணம் பாடுகிறது மஹிந்த அணி!

  • March 26, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]

பொழுதுபோக்கு

கார் விபத்தில் நடிகை பலி!

  • March 26, 2026
  • 0 Comments

நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா Harshil Kalia (வயது – 30) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ளார். அத்துடன், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார். சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது கார் தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது. இதில் ஹர்ஷில் காலியா, […]

இந்தியா செய்தி

மாயாஜால தேன் எனக்கூறி லட்சங்களை சுருட்டிய ஆசாமி கைது!

  • March 26, 2026
  • 0 Comments

துருக்கியில் உள்ள குகையில் இருந்து பெறப்பட்ட அரிய வகை தேன் எனக் கூறி 15 லட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பு) விற்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் காரத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அசோக், தன்னை சாமியார் என்றும் ஜோதிடர் என்றும் கூறிக் கொண்டு மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணொருவர் கடந்த வாரம் நாசிக் காவல்துறையில் அசோக் மீது பாலியல் வன்கொடுமை […]

உலகம் செய்தி

ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயம்!

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதியை Xi Jinping சந்தித்து பேச்சு நடத்துவதற்காக அந்நாட்டுக்கு செல்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். எனினும், ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயமானது இரு […]

இலங்கை செய்தி

கொழும்பு வரும் ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதியுடன் இன்று பேச்சு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இன்று (26) பயணம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவே கொழும்பு வருகின்றது. நீண்டகால ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம், பெட்ரோலிய விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாடு செய்து கொள்வது குறித்து இக்குழு ஆராயவுள்ளது. 1974-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் ஒரு முறையான எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மூத்த […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ். கொடியை இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய சிறுவன் கைது!

  • March 26, 2026
  • 0 Comments

ஐ.எஸ். IS பயங்கரவாத அமைப்பின் கொடியை இறக்குமதி செய்தார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா Australia , மெல்போர்னைச் Melbourne சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட மேற்படி கொடியைக் காவல்துறையினர் கைப்பற்றிய பின்னர், அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி சிறுவனின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையிலான தகவல்கள் அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் முற்படுத்தப்பட்டுள்ளார். […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை French diplomat Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அர்னால்ட், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரச் சீரழிவு குறித்து நேரடி ஆய்வுகளை மேற்கொள்வார். ஈரான் மீதான போர் உலகளாவிய எரிசக்தி மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளதால், இந்தப் பதற்றம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தது ஈரான்?

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று ஈரானிய உயர் மட்ட தூதரக அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார். ஊடகங்களில் கூறப்படுவதுபோல இந்த முன்மொழிவு பயனுள்ளதாக இல்லை என்றும், இது உலக நாடுகளை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், மற்ற நாடுகளைப் போலத் தேவையில்லாமல் தனது இலக்குகளை மாற்றிக்கொள்ளாது என்றும் […]

உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: ஐ.நாவில் 27 ஆம் திகதி விவாதம்!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் UN Human Rights Council எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது. மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்குமாறு ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகிறது. போர் […]

error: Content is protected !!