பொழுதுபோக்கு

போர் பதற்றம்: சென்னை திரும்பிய அஜித்!

  • March 11, 2026
  • 0 Comments

துபாயில் இருந்து நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் துபாயில் தங்கியிருந்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், சென்னை திரும்ப முடியாமல் அவர் துபாயில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், துபாயில் இருந்து அஜித் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துள்ளார். இது குறித்த காணொளிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.  

விளையாட்டு

இந்தியா – ஸிம்பாப்வே மோதலில் இசை விருந்து!

  • February 25, 2026
  • 0 Comments

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (26) நடைபெறவுள்ள இந்திய மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, அனிருத்தின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. தனது துள்ளலான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடும் அனிருத், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தவுள்ளார். குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் குறித்த நிகழ்வு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

error: Content is protected !!