அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் ஒன்றிணைவால் அச்சத்தில் அரசு!

  • January 28, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும் UNP, ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார t Ranjith Madduma Bandara தெரிவித்தார். இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ளனர். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எமது பலம் தெரியவரும்.” […]

இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எதிரணிகள் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டினாலும்அது இன்னும் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!

  • January 2, 2026
  • 0 Comments

“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

error: Content is protected !!