அரசியல் இலங்கை செய்தி

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா?

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya நிராகரித்தார். சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma […]

இலங்கை செய்தி

இராஜதந்திர வெற்றியோடு நாடு திரும்பினார் பிரதமர்!

  • January 23, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இன்று (23) பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் […]

இலங்கை செய்தி

சுவிஸில் புலம்பெயர் இலங்கையர்களுடன் பிரதமர் சந்திப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை சமுகத்தினருடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிஸ். டாவோஸில் உலகப் பொருளாதாரமன்ற மாநாடு நடைபெறுகின்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றார். உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்துவருகின்றார். இந்நிலையிலேயே அங்கு வாழும் இலங்கையர்களையும் பிரதமர் சந்தித்துள்ளார். இது தொடர்பான அவரது முகநூல் பதிவு வருமாறு, “ சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் மற்றும் தொழில்சார் சமூகத்தினரைச் சந்தித்தேன். நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், கூட்டுறவைப் […]

இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

பொருளாதார மீட்சி குறித்து ஐரோப்பிய ஆணையாளருடன் பிரதமர் ஆராய்வு!

  • January 20, 2026
  • 0 Comments

சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவுடன் Jozef Síkela பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியவை வருமாறு, “ சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவைச் […]

இலங்கை செய்தி

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சுவிஸ் பயணம்!

  • January 19, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு World Economic Forum (WEF) இன்று (19) ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இலங்கை நேரப்படி இன்று அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கி பயணமானார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ Anil Jayantha Fernando மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் பயணித்துள்ளனர். 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற […]

அரசியல் இலங்கை செய்தி

“கோ ஹோம் ஹரிணி” என கோஷம் எழுப்பிவிட்டு வெத்து வேட்டாக வீடு திரும்பிய விமல்!

  • January 14, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாகிரகப் போராட்டத்தை விமல் வீரவன்ச Wimal Weerawansa முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், அது தொடர்பில் அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்படுகின்றது. தமது போராட்டம் வெற்றியளித்துவிட்டது என விமல் வீரவன்ச அறிவிப்பு விடுத்தாலும், இது விடயத்தில் வெற்றியென கேள்வி எழுப்படுகின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என்பதே விமல் வீரவன்சவின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. இவை நடக்கும்வரை தனது […]

அரசியல் இலங்கை செய்தி

அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?

  • January 14, 2026
  • 0 Comments

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார். […]

அரசியல் இலங்கை செய்தி

2 நாளாக தொடர்கிறது விமலின் போராட்டம்: அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!

  • January 13, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் Wimal Weerawansa முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச […]

error: Content is protected !!